சென்னை புத்தகக் கண்காட்சியில், தமிழ்நாடு சிறார்"எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கச் சார்பில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா 19.02.2022 கொண்டாடப்பெற்றது‌. விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக இல்லம் தேடிக் கல்வித் திட்ட அலுவலரும், நூலக இயக்குநருமான திரு. இளம்பகவத் I.A.S. அவர்கள் கலந்துகொண்டார். குழந்தைக் கவிஞர் பாடல்களைப் படிக்காத சிறுவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது என்றார். விழாவில் குன்றத்தூர் பாவேந்தர் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றுக் குழந்தைக் கவிஞரின் பாடல்களைப் பாடினார்கள். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (பப்பாசி) செயலர் திரு. முருகன் அவர்கள் வரவேற்க, . தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கச் செயலர் திரு.விழியன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பத்திரிகையாளர் திரு. ஆதி வள்ளியப்பன் அவர்கள் குழந்தைக் கவிஞரின் குழந்தை இலக்கியப் பங்களிப்புப் பற்றி உரையாற்றினார். குழந்தைக்கவிஞரின் மகன் திரு. அழகப்பன், மகள் திருமதி உமா வள்ளியப்பன், திருமதி. தேவி நாச்சியப்பன் , பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.