ஸ்ரீலஸ்ரீ முத்துராமலிங்க ஆண்டவர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியும், கோவிலூர் ஆண்டவர் மெட்ரிக் பள்ளியும் இணைந்து இவ்விழாவை நடத்தினார்கள். விழாவிற்கு சீர் வளச் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் தலைமை வகிக்க, பேராசிரியர் திரு. கரு. முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இரு பள்ளியைச் சேர்ந்த 80 குழந்தைகள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்கள் எழுதிய பாடல்கள், கதைகள், நாடகங்கள் ஆகியவற்றை ஆடி, பாடி, நடித்துக் காட்டி அனைவரையும் மகிழ்வித்தனர். 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இவ்விழாவைக் கண்டு களித்தனர். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களின் குடும்பத்தினரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.